அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 19, 2011

பொங்கல் கவிதை

தைத்திருநாள் எங்கள் தமிழர் திருநாள்

                                                                       --- இரவிகிருஷ்ணன்

மார்கழியின் கடைசிப் பனித்துளி
புல்லின் மேல் மின்னிட…
தென் தமிழச்சிகளின்
வண்ண கோலங்களில் வந்து பிறக்கிறாள் !


கழனி எங்கும் கதிர் முதிர
வந்துவிட்டது தமிழர் தினம்!


பொன்னு விளையற பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழா !


உழுது உழைத்த காளைக்கு
ஈரம் நிறைந்த மண்ணின்
வீரத் தாலாட்டு !


காளையரும் சேலையரும்
கழனிதனில் பெற்றெடுத்த
பொன்நெல் கொண்டு….. பொற்காலப் பானையில்
புதுப் பொங்கல் ஆரம்பம்!


மன்னர் தம் வீரம் கொண்டு
மறவர் குல மாணிக்கங்கள் - இங்கு
மதிப்பீடு செய்யப்படுகிறது !


புழுதிக் களத்திலே
மிரட்டும் விழிகளுடன்
இரட்டை ஈட்டிகள் தயாராயின !


சிலர் ஓரம் கட்ட 2
சிலரை ஓரம் கட்டியது !


சிங்கத்தமிழ் சிறுத்தைகள் சில
வழுவிழந்து மண்ணை முத்தமிட்டன!


விண்ணதிரும் ஒலிக்கரையில்
வியப்பு வண்ணம் விழிகள் பூக்க
வந்தான் ஒரு ஓவியன் !


பணிந்தான் அனைவருக்கும்
பணிந்தன இரட்டை ஈட்டிகள் !


விந்தை நிறை உலகிலே
வியப்புமிகு இத்திருநாள் !
ஆண்டாண்டு வந்தாலும்... அலுப்பதில்லை !


ஏக்கமாய்………… இன்னும் சில
காளைகள் முச்சிரைக்கின்றன !
முயன்று பார்க்க வாருங்களேன்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL