அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 28, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொங்கல் விழா !

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 14.01.2011 அன்று சமத்துவ பொங்கல் விழா, தலைப் பொங்கல் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திரு.கயல் தினகரன், தலைவர், நூலக ஆணைக்குழு, சென்னை, திரு.கோபண்ணா, துணைத்தலைவர், நூலக ஆணைக்குழு, சென்னை, அறிவொளி, இயக்குநர், பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு அரசு, இயக்குநர், மெட்ரிக் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, ராமலிங்கம், உதவி இயக்குநர், பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு அரசு, திரு. மாதேஸ்வரன், மாவட்ட நூலக அலுவலர், சென்னை, ஆலோசகர்கள் திரு.அல்போன்ஸ், திரு.பன்னீர் செல்வம், திரு.செந்திலன் ஆகியோரும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்து நூலகர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு நிகழ்வுகளாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சார்ந்த நூலகர்களின் கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல் மற்றும் பரதநாட்டியாலயா, அண்ணா நகர் நாட்டியப்பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்ட பரதநாட்டியாலயா மாணவிகளுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL