அன்று காலை பொது நூலக இயக்ககத்தின் இயக்குனர் முனைவர்.க.அறிவொளி அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார். முன்னதாக இயக்குனர் அவர்களை பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குனர் மற்றும் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ), அண்ணா நூற்றாண்டு நூலகம், திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திரு. மாதேஸ்வரன், சென்னை மாவட்ட நூலக அலுவலர் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ) அண்ணா நூற்றாண்டு நூலகம், திரு.ராமலிங்கம், உதவி இயக்குனர், பொது நூலக இயக்ககம் மற்றும் நிர்வாக அலுவலர் (பொ) அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூல்கத்தின் அனைத்து நூலகர்கள், இதர பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.