ஜெரோனிமோ ஸ்டில்டன் நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவிற்கு 01.06.2011 அன்று விஜயம் செய்தார் இந்நிகழ்ச்சியானது ஸ்கொலாஸ்டிக் நிறுவனமும் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இணைந்து குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தின் மேல் ஆர்வத்தை தூண்டவும் நடத்தப்பட்டது.
ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குழந்தைகளுக்கு பிரபல எழுத்தாளர் ஜெரோனிமோ ஸ்டில்டன் பற்றியும் அவர்களது கதையில் எழுத்தாளர் பெயரிலேயே வரும் எலி கதாபாத்திரம் பற்றியும் சிறு முன்னுரையினை அளித்தார்.
எலி கதாபாத்திரமானது குழந்தைகள் பிரிவிற்கு வந்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் தாங்கள் புத்தகத்தில் படித்த கதாபாத்திரமானது நேரில் வந்ததை கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.
ஸ்வாதி எனும் நூலக குழந்தை வாசகரால் ஜெரோனிமோ ஸ்டில்டன் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக வாசித்து காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஜெரோனிமோ ஸ்டில்டனின் தங்கையான தியா ஸ்டில்டன் பற்றிய குறுக்கெழுத்து புதிர் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தார் பரிசுகளை வழங்கினர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.