ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குழந்தைகளுக்கு பிரபல எழுத்தாளர் ஜெரோனிமோ ஸ்டில்டன் பற்றியும் அவர்களது கதையில் எழுத்தாளர் பெயரிலேயே வரும் எலி கதாபாத்திரம் பற்றியும் சிறு முன்னுரையினை அளித்தார்.
எலி கதாபாத்திரமானது குழந்தைகள் பிரிவிற்கு வந்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் தாங்கள் புத்தகத்தில் படித்த கதாபாத்திரமானது நேரில் வந்ததை கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.
ஸ்வாதி எனும் நூலக குழந்தை வாசகரால் ஜெரோனிமோ ஸ்டில்டன் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக வாசித்து காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஜெரோனிமோ ஸ்டில்டனின் தங்கையான தியா ஸ்டில்டன் பற்றிய குறுக்கெழுத்து புதிர் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தார் பரிசுகளை வழங்கினர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.