அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

May 15, 2011

சிறுவர்களுக்கான 5 நாட்கள் ஓவியப்பயிற்சி பட்டறை..!





கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, நமது நூலகத்தில் 8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப்பயிற்சி பட்டறை நடைபெற்றது.

10-05-2011 முதல் 14-05-2011 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 35 சிறுவர்கள் பங்குபெற்றனர். என்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள திருமதி. மேனகா நரேஷ் அவர்கள் ஓவியக்கலையை சிறுவர்கட்கு எளிய முறையில் பயிற்சியளித்தார்.

ஒவ்வொரு நாளும் வரைவதற்கான அட்டை, வண்ணம், தூரிகைகளுடன் கலந்துகொண்ட குழந்தைகள், கண்ணை கவரும் ஓவியங்களுடன் பயிற்சியை நிறைவு செய்தனர். அந்தந்த நாட்கள் வரையப்பட்ட ஓவியங்கள் நூலகத்தின் வரவேற்பு பகுதியில் வாசகர்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்பட்டன.

சிறார்களின் ஓவியத் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் பங்குபெற்ற அனைவருக்கும் பயிற்சியாளரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சிறந்த ஓவியங்களை படைத்த சிறார்கள் கோகுல்ராஜ், கீர்த்திவாசன், லக்சயா ஆகியோருக்கு சிறப்பு பரிசாக "வண்ணம் தீட்டும் உபகரணங்கள்" வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL