ஜப்பான் நாட்டு பொம்மைகள் கண்காட்சி நமது நூலகத்தின் இரண்டாம் தளத்தில் (தமிழ் நூல்கள் தளம் - பிரிவு 'அ' ) 08.02.2011 தேதி முதல் 19.02.2011 தேதி வரை நடைபெறுகிறது. "ஜப்பான் பவுண்டேசன்" அமைப்பினரால் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியை ஜப்பான் தூதர் திரு. கசுவா மினகவா அவர்கள் துவக்கி வைத்தார்.
கண்காட்சியில் ஜப்பான் நாட்டு கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் வகையில் பொம்மைகள் வரிசையாக அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளது, காண்போரை கவரும் விதமாக உள்ளது. இந்த கண்காட்சி அந்நாட்டு கலாச்சாரத்தை எளிதில் நாம் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். நூலக வாசகர்கள் தங்கள் உலக அறிவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக இது நடைபெறுகிறது. வாசகர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.