உலக ஆட்டிசம் எனும் மூளைச்சிதைவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 2.04.2011 சனிக்கிழமை அன்று எமது அண்ணா நூற்றாண்டு நூலகமும், வித்யாசாகர் (கோட்டூர்புரம்) சிறப்பு பள்ளியும் இணைந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு முகாமை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தினர்.
இவ்விழிப்புணர்வு முகாமில் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இயல்பு பற்றியும், அவர்களிடம் மறைந்திருக்கும் சிறப்புத்திறனை அறிந்து அதனை ஊக்குவிப்பது பற்றியும் துண்டுபிரசுரங்கள், செய்முறை விளக்கம், படவிளக்கம் மற்றும் விழிப்புணர்வு கருத்துரைகள் ஆகியவற்றின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பாக நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.