அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Apr 27, 2011

குழந்தைகளுக்கான யோகாசன நிகழ்ச்சி

குழந்தைகளுக்கான யோகாசன நிகழ்ச்சி 24.04.2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மாஸ்டர். S. நிரஞ்சன் மற்றும் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. சூரிய நமஸ்காரத்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், சிறார்கள் YOGA என்ற எழுத்து வடிவில் தங்களின் உடலினை மடித்தும் வளைத்தும் நின்றனர்.
எட்டு வயதே ஆன சிறுவன்.S. நிரஞ்சன், நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். அவர் மிகவும் கடினமான ஆசனங்களான, விருச்சிகாசனம், கண்ட பேருண்டாசனம், மயூராசனம் போன்ற ஆசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். மேலும் G. கமலி, M. சாஜன் மேனன், J. அருண்குமார் ஆகியோர் வஜ்ராசனம், சக்ராசனம், ஹாலாசனம், சிரசாசனம் போன்ற ஆசனங்களை செய்துகாட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் இச்சிறார்களுக்கு பயிற்ச்சியளித்துவரும் யோகசன ஆசிரியர் முனைவர். V. பாலகிருஷ்ணன் அவர்கள், பார்வையாளர்களாக பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் 15 எளிதான ஆசான்களை கற்பித்து, தினமும் அவற்றை செய்வதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளான எளிதான செரிமானம், மூச்சுப்பயிற்சி, மேலும் காய்ச்சல், சளி, மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை போன்ற இதனால் ஏற்படும் பற்பல நன்மைகளை விளக்கினார்.

யோகாசன ஆசிரியர். முனைவர். V. பாலகிருஷ்ணன், சிறுவன். S. நிரஞ்சன் மற்றும் குழுவினர்க்கும், இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்குகொண்ட பார்வையாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL