அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

May 4, 2011

வண்ணம் தீட்டுதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01/05/2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஸ்கொலாஸ்டிக் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியினை நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் நடத்தினர். 4 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஏறக்குறைய 100 குழந்தைகள் வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தங்களின் ஓவிய திறமையையும் கற்பனை திறனையும் வெளிப்படுத்தினர்.

4 வயது முதல் 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டிராகன் படத்திற்கு வண்ணம் தீட்டினர். 8 வயது முதல் 10 வயது வரையான குழந்தைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு "புத்தக குறி" (Book Mark) செய்து அதில் படம் வரைந்து வண்ணம் தீட்டினர். 11 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்கள் புத்தக உரையினை செய்து வண்ணம் தீட்டினர்.

வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் தங்களின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தி வாசகர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கு கொண்ட அனைவரும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தாருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL