4 வயது முதல் 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டிராகன் படத்திற்கு வண்ணம் தீட்டினர். 8 வயது முதல் 10 வயது வரையான குழந்தைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு "புத்தக குறி" (Book Mark) செய்து அதில் படம் வரைந்து வண்ணம் தீட்டினர். 11 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்கள் புத்தக உரையினை செய்து வண்ணம் தீட்டினர்.
வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் தங்களின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தி வாசகர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கு கொண்ட அனைவரும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தாருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.